Tuesday, November 13, 2012

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு கால அட்டவனை நவம்பர்-2012


நேரம்
காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை
நேரம் 11.30 மணி முதல் 1.00 மணி வரை

15-11-2012 வியாழன்
தமிழ் முதல் தாள்
தமிழ் இரண்டாம் தாள்
16-11-2012 வெள்ளி
ஆங்கிலம் முதல் தாள்
ஆங்கிலம் இரண்டாம் தாள்
19-11-2012 திங்கள்
கணக்கு


20-11-2012 செவ்வாய்
அறிவியல்


21-11-2012 புதன்
சமூக அறிவியல்



Thursday, October 11, 2012

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா

தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா பள்ளி தாளாளர் ஹாஜி லயன்.அ.பஷீர் அஹமது தலைமையில் 05.09.2012 காலை 10.00 மணிக்கு நடைபெற்றது மாணவர் தலைவர் செல்வன்N.முஹம்மது இர்ஷாத் வரவேற்புரை ஆற்றினார்.
மாணவர்களின் அறிவுகண்களை திறக்க பாடுபடும் அலிஃப் ஆசிரிய பெருமக்களை பாராட்டி வாழ்த்தி மாணவர்களின் சார்பாக நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மாணவி செல்வி.N.மைமூன் சஹானா நன்றியுரை ஆற்றினார். முதல்வர் K.இளங்கோவன் ஆசிரியர்கள் சார்பில் எற்புரை நிகழ்த்திட கூட்டம் இனிதே முடிவுற்றது.
தாளாளர் ஹாஜி லயன்.அ.பஷீர் அஹமது அவர்களுக்கு பத்தாம் வகுப்பு மாணவர்கள் நினைவு பரிசு வழங்கிய போது எடுத்த படம்.
 முதல்வர் இளங்கோவன் அவர்களுக்கு பத்தாம் வகுப்பு மாணவர்கள் நினைவு பரிசு வழங்கிய போது எடுத்த படம்.



Sunday, September 30, 2012

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் கண் விழிப்புணர்வு பேரணி & கருத்தரங்கம்

கடந்த செப்டம்பர் மாதம்  30-ந் தேதி வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் கண் விழிப்புணர்வு பேரணிகருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது..
விழாவில் அய்யம்பேட்டை டவுன் லயன் சங்கம் உறுப்பினர் லயன் சுப்பராமண் அவர்கள் வரவேற்று பேசினர்..
அலிஃப் மெட்ரிக் பள்ளியின் தாளாளரும் லயன்ஸ் மாவட்டத் தலைவரும் லயன்.ஹாஜி..பஷீர் அகமது அவர்கள் கண்தானம் பற்றி மாணவர்களிடம் எடுத்து கூறினார்..
கூட்டத்தில் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனார்.

Wednesday, September 5, 2012

ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்..!

“ஆசிரியர்களிடம் மாணவர்கள் படிக்கிறார்கள்

ஆசிரியர்கள் மாணவர்களைப் படிக்கிறார்கள்“

“பெற்றோர்கள் குழந்தைகளை மட்டுமே உலகத்துக்குத் தருகி்ன்றனர்.

ஆனால் குருவோ உலகத்தையே குழந்தைகளுக்குத் தருகிறார்.“

  ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.